நடிகை சிம்ரனுக்கு பிரபோஸ் செய்ய நினைத்த நடிகர்!! நடுவில் புகுந்து கெடுத்துவிட்ட நபர்..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்து இளம்பெண்களின் கனவுக்கண்ணனாக இருந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் அப்பாஸ். முன்னணி இயக்குனர்கள் படத்தில் நடித்து வந்த அப்பாஸ், திடீரென மார்க்கெட் குறைந்து வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார்.
தற்போது பல ஆண்டுகள் கழித்து அப்பாஸ் மீண்டும் இந்தியா பக்கம் வந்து பல பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்பாஸ் அப்போதைய காலக்கட்டத்தில் சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதில் ஒருவர் தான் நடிகை சிம்ரன்.
3 படங்களில் இருவரும் இணைந்து நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்ட்ரி காதலாக மாறியதாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் அவரிடம் சிம்ரன் இருந்தால் தான் நடிப்பேன் என்று கூறியது உண்மையா என்று கேள்விக் கேட்கப்பட்டது. அதற்கு அப்பாஸ், சிம்ரனை ரொம்ப பிடிக்கும், ஏனென்றால் இருவரும் மூணு படத்தில் சேர்ந்து பண்ணி இருக்கிறோம்.
அப்போது கிளோஸ் ஆக இருக்கும் போது ஈர்ப்பு வந்தது. பிரபோஸ் செய்யும் அளவிற்கு செல்லவில்லை. அதற்கு காரணம், நடுவில் யாரோ வந்து புகுந்தார்கள், அவர் யார் என்று பெயர் சொல்லமாட்டேன். இருவருக்கும் கல்யாணமாகிவிட்டது அதனால் வேண்டாம் என்று அப்பாஸ் கூறிவிட்டார். அந்த நபர் யார் என்று ரசிகர்கள் ஆராய்ந்து பார்த்தில், டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரம் தான் என்று கூறி வருகிறார்கள்.