250 கோடி சொத்து.. 4வது திருமணம் செய்து கொண்ட நடிகர் பாலா!! பொண்ணு யாரு தெரியுமா..
நடிகர் பாலா
தமிழ், மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பாலா. இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவின் உடன்பிறந்த தம்பியாவார்.
முதலில் சந்தனா சதாசிவா என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் முதல் திருமணம் குறித்து பாலா எந்த தகவல் கூறவில்லை.
அதன்பின் தான் கடந்த 2010ல் பாடகி அம்ருதாவை திருமணம் செய்து சில ஆண்டுகளுக்கு பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.
2016ல் இரண்டாம் மனைவியை விவாகரத்து செய்த பாலா, 2021ல் எலிசபெத் என்ற மருத்துவரை 3ஆம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லையாம்.
ரகசியமாக இவர்களின் திருமணம் நடந்த நிலையில், தற்போது இரண்டாம் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் பாலா. சமீபத்தில் முதல் மனைவி அம்ருதா, பாலா மீது புகாரளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
250 கோடி சொத்து
பின், பாலா கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்து மனைவி கொடுத்த புகாருக்கு பதிலடியும் கொடுத்திருந்தார். அவர் அளித்த பேட்டியில், தன்னிடம் 250 கோடி சொத்து இருக்கிறது.
தனது குடும்ப சொத்தில் இருந்து பங்காக இந்த 250 கோடி வந்ததாகவும் இந்த சொத்து குறித்து அறிவிப்பு வெளியானதும் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகிறது என்றும் கேரளாவை விட்டு வேறு எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்.
மூன்றாவது திருமணம்
மூன்றாவது முறையாக சட்ட ரீதியாக திருமணம் செய்து குடும்பத்துடன் வாழ விரும்புகிறேன் என்றும் தனது 250 கோடி சொத்துக்கு நான் சொல்பவரே வாரிசு என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் பாலா 4-வது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தனது உறவினரான கோகிலா என்பவரை கேரளாவில் உள்ள பாவகுளம் மகாதேவர் கோவில் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் நடிகர் பாலா.
നടൻ ബാല വീണ്ടും വിവാഹിതനായി. ബന്ധുവായ കോകിലയാണ് വധു. കൊച്ചിയിലെ ക്ഷേത്രത്തിൽ വച്ചായിരുന്നു വിവാഹം#ActorBala #bala #marriage #actor #kochi #malayalamcinema pic.twitter.com/V3d7SPg9rP
— MovieVerienz (@prankkuuzz) October 23, 2024