பார்க்க அப்படியே பிச்சைக்காரன் தான்!! நடுரோட்டில் நின்ற நடிகர் தனுஷின் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், பாலிவுட் தாண்டி தற்போது ஹாலிவுட்டில் கால் பதித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து அவரே இயக்கி நடிக்கும் டி50 படத்தின் ஷூட்டிங்கினையும் முடித்து அடுத்த படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி தன்னுடைய 51வது படமான இயக்குனர் சேகர் காமுலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதற்கான ஷூட்டிங் திருப்பதியின் அலிபிரி பகுதிக்கு அருங்கில் நடந்துள்ளது.
அனுமதி வாங்கி நடத்தப்பட்ட அப்படத்தின் ஷூட்டிங்கின் போது பொதுமக்களுக்கு கடும் அவதி ஏற்பட்டதால் கொடுத்த அனுமதியினை மறுத்துள்ளனர் போக்குவரத்து போலிசார். திருப்பதி மலையடிவராத்தில் கூட படம் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனுஷ் அப்படத்தில், பிச்சைக்காரனாக அதுவும் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு நடுரோட்டில் நிற்கும் வீடியோ இணையத்தில் கசிந்துள்ளது. பர்ஸ்ட் லுக்கே வெளியாகாத நிலையுல் தனுஷின் அந்த நியூ லுக் லீக்கானதால் படக்குழுவினர் மற்றும் தனுஷ் ரசிகர்கள் சற்று சங்கடத்தில் இருந்து வருகிறார்கள்.
புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்க..