திணறி தவிக்கும் விஜய் மகன் சஞ்சய்!! எஸ்கேப்பாகும் டாப் நடிகர்கள்..
முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தன் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் சாஷா திவ்யா இருவரையும் லண்டனின் படிக்க வைத்து அவ்வப்போது பார்த்தும் வந்துள்ளார். இருவரையும் தன் படங்களில் நடிக்கவும் வைத்திருக்கும் விஜய், தன் மகன் ஜேசன் சஞ்சய்யை நடிக்க வைப்பீர்களா என்ற கேள்விக்கு, அது அவருடன் விருப்பம் நான் தலையிட மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இதனை அடுத்து சினிமா சார்ந்த பட்டப்படிப்பை முடித்து தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தினை இயக்கி வருகிறார் ஜேசன் சஞ்சய். இந்நிலையில் இப்படத்தில் பல நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள் என்ற பேச்சு எழுந்து வந்த நிலையில், படத்தின் பூஜை அறிவித்து ஒரு வருடமாகியும் கிணத்தில் போட்ட கல்லாக அப்படத்தின் அப்டேட் அப்படியே இருக்கிறது.
சமீபத்தில் கூட ஜேசன் தன்னிடம் கதை கூறியிருப்பதாகவும் சில காரணங்களால் பேச்சுவார்த்தையோடு நின்று போனதாகவும் கவீன் கூறியிருந்தார். மேலும் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. கவின், துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களிடம் ஜேசன் கதை சொன்னது உண்மை என்றாலும் ஜேசனிடம் கதையின் சில விளக்கங்களுக்கு பதில் இல்லை என்றும் இயக்கத்தில் பெரிய அனுபவம் இல்லை என்றும் ஜேசன் இயக்கத்தில் நடிக்க நடிகர்கள் யாரும் முன்வரவில்லையாம்.
அதோடு விஜய் சேதுபதி வில்லனாகவும் ஆசைப்பட்ட ஜேசன் பிடியில் இருந்து ஆர் எஸ்கேப் ஆகிவிட்டாராம். மேலும், ஏ ஆர் ரகுமானின் மகன் அமீனை இசையமைக்க ஜேசனுக்கு ஆசையாம். மேலும் ஷங்கரின் இரண்டாம் மகள் அதிதி ஷங்கரும் இதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.
ஆனால் பிரபல நடிகர்கள் யாரும் ஜேசன் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாததால் படம் டேக் ஆஃப் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் லைக்காவும் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு வருடமாகியும் படத்திற்கான காஸ்ட் தேர்வு செய்து படத்தை ஆரம்பிப்பாரா ஜேசன் சஞ்சய் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.