கோபத்தில் கத்திய இயக்குனர்!! எழுப்ப வந்த மேக்கப் மேனை அடித்து, அடிவாங்கிய வினு சக்ரவர்த்தி..
தமிழ் சினிமாவில் 80, 90களில் இருந்தே குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் அழியா இடம் பிடித்தவர் நடிகர் வினு சக்ரவர்த்தி. கடந்த 2017ல் தன்னுடைய 71வது வயதில் மரணமடைந்தார். இவர் பற்றி பல பிரபலங்கள் அவருடன் நடித்த அனுபவங்களை பகிர்வதுண்டு.
அந்தவகையில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் பவா லட்சுமணன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வினு சகரவர்த்தியுடன் பணியாற்றிய போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு படத்தின் ஷூட்டிங்கில், இயக்குனர் காலை 7 மணிக்கு ஷூட்டிங் என்று சொன்னார். இயக்குனர் எல்லோரும் காத்திருந்தோம்.
ஆனால் வினு சக்ரவர்த்தி மட்டும் வரவில்லை. ரூமில் அவரை கூப்பிட சென்றபோது, என்ன சார் 7 மணிக்கு வரச்சொன்னாங்க, இன்னும் தூங்கிட்டு இருக்கீங்க என்று சொன்னதும் மேக்கப் மேனை அடித்து, 5 மணிக்கு என்னை எழுப்பத்தானே சொன்னேன் என்று கத்தியிருக்கிறார்.
சிவாஜி சாருக்கெல்லாம் கிளாஸ் வொர்க் பண்ணவர் அந்த மேக்கப் மேன். அவர் திருப்பி வினு சக்ரவர்த்தியை அடித்து, நீ எல்லாம் ஒரு ஆள் நான் சிவாஜிக்கே மேக்கப் போட்டவன் என்று சொல்லி அடித்துவிட்டார்.
அதன்பின் ஷூட்டிங்கிற்கு கிளம்பி வந்ததும் இயக்குனர் கோபத்தில் கேட்க, சாரி தம்பி என்று கூறிவிட்டார் வினு சக்ரவர்த்தி என பவா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.