ஆணவக்கொலைக்கு ஆதரவாக பேசி சர்ச்சையில் சிக்கிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ரஞ்சித்..
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் நடிகர் ரஞ்சித். புது முகங்களை வைத்து கவுண்டம்பாளையம் என்ற படத்தினை நடிகர் ரஞ்சித் இயக்கியிருக்கிறார். அப்படத்தில் நாடக காதல் குறித்தும் அதனால் குடும்பம் மற்றும் பெற்றோர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து படமாக எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெளியாக இருந்த இப்படம் சில பிரிவினர் படத்தை திரையிட்டால் சேதப்பட்டுத்துவோம் என்று கூறியதால் வெளியாகவில்லை. நீதிமன்றம் உத்தரவின் பேரில் படம் நேற்று வெளியானது. சேலத்தில் உள்ள திரையரங்கில் படத்தை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார் நடிகர் ரஞ்சித். அப்போது, சாதி படம் என்று விமர்சிக்கிறார்கள்.
படத்தை பார்த்துவிட்டு நல்ல படமா இல்லையா என்று மக்கள் சொல்லட்டும். மக்களுக்காக இந்த படத்த்தை எடுத்திருப்பதால், ஒரு டாப்பிக்கில் என்ன அடைத்து வைத்து என்னை பற்றி வன்மத்தை பரப்பியும் சமூகத்தினரிடம் இருந்து என்னை புறக்கணிக்க பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஆணவக்கொலை குறித்த கேள்விக்கு, ஆணவக்கொலை என்பது உணர்ச்சி வசப்படுவது தான் என்றும் இதை தான் இந்த படத்தில் நான் தீர்வாக சொல்லியிருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். குழந்தைகள் காதலித்து அதில் பிரச்சனைகளை சந்திக்கும் போது அதன் வலி அந்த பெற்றோர்களுக்கு தான் தெரியும். ஒரு பைக்கை சாதாரணமாக திருடிக்கொண்டு போனால் தேடிப்பிடித்து அடிக்கிறோமே, அப்படி தான் பெற்றோரின் வாழ்க்கையையே அவர்களின் குழந்தைதான்.
அவர்களின் வாழ்க்கைக்கு ஏதாவது பாதிப்பு வரும் போது கோபத்தை வெளிப்படுத்துவது பெற்றோரின் அக்கறையால் நடக்கிறது. அது வன்முறை அல்ல, அது கலவரமும் அல்ல. நல்லதோ, கெட்டதோ அக்கறையின் காரணமாக நடக்கிறது. இதில் யாரை குற்றம் சொல்வது எனக்கு தெரியவில்லை என்று பேசியிருக்கிறார். அவரி பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில் நடிகர் ரஞ்சித்திற்கு எதிராக சிலர் கண்டனம் தெரிவித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.