ரிலீசுக்கு ஆப்பு வைத்த 5கோடி குரூப்புகள்! சிக்கி தவித்த 5 நடிகர்கள் யார்யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகினால் போது சென்சார் போட்டில் ஆய்வுக்கு பிறகு படம் வெளியாகினால் அதை எப்படியாவது ஒரு குரூப் சண்டைபோட்டு இது குறை அது குறை என கேஸ் போட்டு நிம்மதியா தயாரிப்பாளரை இருக்க விடமாட்டார்கள். அப்படி தமிழ் சினிமாவில் வெளியாகாமல் தவித்து கஷ்டப்பட்ட 5 முன்னணி நடிகர்கள் யார் யார் தெரியுமா?
இதில் முதல் ஆளாக இருப்பவர் தான் சிம்பு. இவர் படத்திற்கு வெளியில் கூட பிரச்சனை இருக்காது. ஆனால் படக்குழுவில் இயக்குநர் அல்லது தயாரிப்பாளர்களே இவர் படத்திற்கு தடையாக இருந்து ரிலீஸ் செய்யாமல் இருப்பார்கள். கடைசி நிமிடம் வரை கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாவம் டா அந்த மனுஷன் எனகூறும் அளவிற்கு ஒவ்வொரு பட வெளியீட்டிற்கு பெரு மூச்சு விடுவார். சமீபத்தில் மாநாடு படத்தில் கூட வெளியாகுவதில் சந்தேகம் ஏற்பட்ட சிலர் உதவியதால் வெளியானது.
அவருக்கு அடுத்ததாக இருப்பது தளபதி விஜய் தான். படத்தில் எதாவது ஒரு சமுக அக்கரை இருக்க வேண்டும் எனபதற்காக அரசியல் பேசி மாட்டிக்கொள்வார். அவரின் சமீபத்தில் படங்களில் கூட தியேட்டரையே உடைத்த நிலைக்கு தள்ளப்பட்டது. இதில் ஒன்றாக இருப்பது தலைவா, துப்பாக்கி, கைதி போன்ற படங்கள் தான். சமீபத்தில் மாஸ்டர் படம் மட்டும் தான் எதுவும் அமைதியாக முடிந்தது பிரச்சனை.
அவருக்கு அடுத்து என்பதைவிட மூத்தவர் என்றே சொல்லலாம். கோடிக்கணக்கில் செட்டமைத்து பொருளாதாரா ரீதியில் சிக்கலில் சிக்குவார் நடிகர் கமல் ஹாசன். விஷ்வரூபம் படத்திற்கு பல எதிர்ப்புகள் சில சமுகத்தினரிடம் இருந்து கிளம்பியது.
அவரை தொடர்ந்து இருப்பர் தான் நடிகர் சூர்யா. சமீபத்தில் ஜெய் பீம் படம் குறிப்பிட்ட சமுகத்தினரை இழிவு படுத்தியதாகவும் போலிசாரை அசிங்கப்படுத்தியதாகவும் கூறி 5 கோடி அளவில் காசு பார்க்க ஒரு குரூப் கிளம்பியது.
தற்போது வரை அவரை விடாமல் அந்த குரூப் கேஸ் மேல் கேஸ் போட்டு வருகிறது.
அடுத்து இருப்பவர் படம் என்றால் அது தனுஷ் தான். ஒருசில காரணங்களால் சமீபத்தில் படமான என்னை நோக்கி பாயும் தோட்டா, கர்ணன் போன்ற படங்களில் சிக்கலை சந்தித்தார் தனுஷ். இதைவிட சர்ச்சையிலும் ஆரம்பத்தில் சிக்கி எதிர்ப்பை சம்பாதித்தார்.