அது போன்ற நேரத்தில் மது அருந்துவேன்.. தனுஷ் பட நடிகையா இப்படி
சம்யுக்தா மேனன்
தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகையாக மாறியவர் சம்யுக்தா மேனன். தமிழில் களரி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்து தீவண்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.
அப்படியே மலையாள சினிமா பக்கம் சென்றவர் உயரே படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார், அடுத்து ஒரு யமந்தன் பிரேமாகதா என்னும் படத்தில் நடித்தார்.
அடுத்தடுத்த மலையாளம், தெலுங்கு, தமிழ் என படங்கள் நடித்து பிஸியாக வலம் வந்தார். பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் விருந்து, மற்றும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்த நடிகையா இப்படி
இந்நிலையில், சம்யுக்தா மது அருந்துவது குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.
அதில், "பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது நான் ஆல்கஹால் எடுப்பேன், ஆனால் எல்லா பார்ட்டிகளிலும் அல்ல, எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் பார்ட்டிகளில் மட்டும் தான்.
சில நேரத்தில் அதிக அளவில் டென்க்ஷனில் இருக்கும்போதும் குடிப்பேன். அதுவும் குறைந்த அளவில் மட்டுமே எடுத்து கொள்வேன்" என்று தெரிவித்துள்ளார்.