சிறுமியாக இருக்கும் போது பட வாய்ப்புக்காக அதை செய்தேன், எங்க அம்மாவுக்கு அது தெரியும்!! பிரபல நடிகை வேதனை
80களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பாக்கிய லட்சுமி. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை பாக்கிய லட்சுமி, தற்போது பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், 14 வயதில் சினிமாவில் வந்ததால் உடலை பெரிதாக்குவதற்காக ஊசிப் போட்டுக்கொண்டேன்.
அந்த சமயத்தில் நடிகைகள் எல்லாரும் கொஞ்சம் கொண்டாக இருப்பார்கள்.
அந்த மாதிரி இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும், அதனால் தான் ஊசி போட்டு கொண்டேன். அதன் பின் உடல் எடை போட்டது, எனக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ஊசி போட்டதற்கான பக்கவிளைவு, கர்ப்ப காலத்தில் தான் எனக்கு தெரியவந்தது.
ஊசி போட்ட விவகாரம் பற்றி அம்மாவுக்கு தெரியும் ஆனால் அப்பாவுக்கு தெரியாது என்று பாக்கிய லட்சுமி கூறியுள்ளார்.