நடுரோட்டில் அந்த இடத்தில் அடித்த குடிகாரன்!! உண்மையை பகிர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.
அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். மேலும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவானுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ஒரு நானும் என் தோழியில் ரோட்டில் நடந்து கொண்டிருக்கும் போது குடித்துவிட்டு ஒருவன் என் மேல் விழுவது போல் வந்தான். அவனை அப்படியே ஓங்கி பளார் என்று அடித்துவிட்டேன்.
அதன்பின் சென்று கொண்டிருக்கும் போது என் தலையில் எதுவோ பலமாக விழுந்ததை போல் உணர்ந்தேன். விபத்தில் சிக்கிவிட்டதாக உணர்ந்தப்பின் பின்னால் பார்த்தால் என்னிடம் அடிவாங்கியவன் என் தலையில் அடித்துவிட்டு வேகமாக தப்பி ஓடினான். உடனே அவனை பிடித்து பக்கத்தில் இருந்த போலிஸ் பூத்தில் ஒப்படைத்து நடந்ததை கூறி சென்றதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.