ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. மாடர்ன் டிரெஸில் இப்படியொரு லுக்..
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ரகு தாத்தா எனும் படம் வெளிவந்தது. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தனது கவனத்தை பாலிவுட் பக்கமும் திருப்பியுள்ளார்.
அட்லீ தயாரிப்பில் உருவாகும் தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் தான் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளிவரவுள்ளது.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரே சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியதோடு கிளாமர் போட்டோஷூட்டையும் நடத்தி வருகிறார். தற்போது மகுடம் சூட்டும் தருணம் என்று கூறி போட்டோஷூடை பகிர்ந்துள்ளார்.
அதில், கீர்த்தி சுரேஷா இது என்று கூறும் அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.