நான் சிங்கிளா இருக்கேன்னு சொல்லவே இல்லையே!! வெளிப்படையாக பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ்..
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்து ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, மகாநடி, சர்கார், அண்ணாத்த, சாணிக் காயிதம், சைரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னித்தீவு போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பாலிவுட்டில் முதன்முதலாக கதாநாயகியாக பேபி ஜான் படத்தில் வருண் தவாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரகு தாத்தா படம் திரையில் வரவிருப்பதால் அப்படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளிலும் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தொகுப்பாளினி, கீர்த்தி சுரேஷிடம், நீங்கள் தனியாக, சிங்கிளாக இருக்கிறோமே என்று ஃபீல் பண்ணி இருக்கீங்களா என்று கேட்டுள்ளார். அதற்கு கீர்த்தி சுரேஷ், நான் சிங்கிளா இருக்கேன்னு சொல்லவே இல்லையே என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.
இதிலிருந்து கீர்த்தி சுரேஷ் சிங்கிள் இல்லை என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில், நான் சிங்கிள் இல்லை பெற்றோருடன் தான் இருக்கிறேன் என்ற நோக்கத்திலும் அவர் அப்படி சொல்லி இருக்கலாம் என்று பலர் இதற்கு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.