வேண்டவே வேண்டாம்-னு சொன்ன அப்பா!! அந்த விஷயத்துக்காக இப்படியொரு பிளான் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். ஜெயம் ரவி படத்தில் முதன் முதலில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் போலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் போல்ட்டாகவும் நடித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் படத்தின் பிரமோஷனுக்காக ஜெயம் ரவியுடன் இணைந்து பேட்டியளித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னுடைய சிறுவயது புகைப்படத்தை பற்றி சில விசயங்களையும் நடிப்பிற்கு எப்படி வந்தேன் என்பதையும் கூறியிருக்கிறார். நான் 9வது படிக்கும் போது என் அக்கா 12வது படித்துக் கொண்டிருந்தாள். அதன்பின் அமெரிக்காவுக்கு படிக்க சென்றுவிட்டாள். ஆனால் நான் அமெரிக்காவுக்கு போகக்கூடாது என்று நினைத்திருந்தேன்.
அதற்கு காரணம் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அமெரிக்காவுக்கு சென்றால் அது நடக்காது என்பதற்காக இங்கேயே டிமிக்கி கொடுத்து வந்தேன். 6 வருடம் கழித்து என் அக்கா இந்தியா வந்து எனக்கு நிறைய சப்போர்ட் செய்ததாகவும் ஆரம்பத்தில் அப்பாவிற்கு பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்றால் இவள் நடிப்பாளா? அவளுக்கு நடிப்பு வருமா? என்ற சந்தேகம் தான்.
நடிக்க வந்து, படம் சரியா இல்லையென்றால் என்ன வேலை பண்ணுவா என்று சாதாரண தந்தை போல் யோசித்தார். அதன்பின் அக்கா தான் அவரை சம்மதம் செய்ய வைத்து நடிக்க சப்போர்ட் செய்தார். அதன்பின் பிரியன் சார் சப்போர்ட்டில் அறிமுகமாகியதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இதற்கு ஜெயம் ரவி, நீங்கள் அமெரிக்கா சென்றிருந்தால் இப்படிப்பட்ட நடிகையை மிஸ் பண்ணி இருப்போம் என்று பெருமையுடன் பேசியிருக்கிறார்.