பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல், அவருடன் டேட்டிங்- ஆ.. மனம் திறந்த நடிகை லட்சுமி மேனன்!!
சசிகுமார் நடிப்பில் வெளிவந்த சுந்தரபாண்டியன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன்.
இப்படத்தை தொடர்ந்து கும்கி, பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக இவர் சந்திரமுகி 2 படத்தில் லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படம் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட லட்சுமி மேனன், பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், எனக்கு ஒருவரை பிடித்துவிட்டால் நேரடியாக சொல்லிவிடுவேன். அந்த மாதிரி சொல்லியும் இருக்கிறேன். அப்படி சொல்லி ஒருவருடன் எனக்கு காதல் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் போது அவரை காதலித்தேன். அவருடன் டேட்டிங் சென்றதில்லை.
ஆனால் போனில் நிறைய பேசியிருக்கிறேன். பட வாய்ப்புகள் வந்துகொண்டு இருந்தது என்னால் படிப்பை தொடர முடியவில்லை, காதலையும் தொடர முடியவில்லை என்று லட்சுமி மேனன் தெரிவித்துள்ளார்.