நடிகரை காதலித்து கழட்டிவிட்ட நடிகை மீனா!! அதுவும் நயன் தாராவுக்கு ஆசைப்பட்ட நடிகருடனா?
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் காலெடி எடுத்து வைத்து தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருபவர் நடிகை மீனா. நைனிகா என்ற மகள் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதிலிருந்து மீண்டு வந்த நடிகை மீனா தன்னுடைய 40 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடினார். ஒருசில படங்களில் நடித்து வரும் நடிகை மீனா நடிகர் நெப்போலியன் பிறந்த நாளுக்கு அமெரிக்கா சென்று வாழ்த்து கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை மீனா மீது பல நடிகர்கள் காதல் வயப்பட்டதோடு அவரிடம் நேரடியாக காதலை கூறியும், உச்சக்கட்டமாக அவர் வீட்டிற்கே சென்று பெண் கேட்டும் இருந்துள்ளனர். அதில் முக்கியமான ஒரு நடிகர் என்றால் அது நடிகர் சரத் குமார் தான்.
மீனா மீது காதல் வயப்பட்ட சரத் குமார், மீனா வீட்டிற்கே சென்று பெண் கேட்டுள்ளார். அதையறிந்த அவரின் தாய் என் மகள் சினிமாவில் தற்போது தான் வளர்ந்து கொண்டிருக்கிறாள், அவளுக்கு திருமணம் என்ற யோசனை எல்லாம் எங்களுக்கு இல்லை என்றும் சினிமா சம்மந்தமே இல்லாத ஒரு நபருக்கு தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாகவும் மீனா தாயார் சரத்குமாரிடம் கூறி அனுப்பி வைத்திருக்கிறார்.
அதன்பின் தான் சில வருடம் கழித்து வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து நைனிகா என்ற மகளை பெற்றெடுத்திருக்கிறார் நடிகை மீனா.
பல நடிகர்கள் மீனா மீது காதல் வயப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மீனாவே ஒரு நடிகர் மீது காதலில் இருந்துள்ளார். சில காரணங்களால் அவரை கழட்டியும் விட்டிருக்கிறார்.
டபுள்ஸ் என்ற படத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் தான் காதலில் சிக்கியிருக்கிறார். அவரின் நடனம் நடிப்பு என்று மீனாவை கவர்ந்ததாலும் பின் பிரபுதேவாவின் நடவடிக்கைகள் ஒரு கட்டத்தில் சில சந்தேகத்தை ஏற்படுத்தியதாலும் அவரை பிரிந்திருக்கிறார் நடிகை மீனா.
மேலும் மீனாவின் அவரது தோழிகள் பிரபுதேவாவிற்கு அதுதான் வேலை என்றும் பல நடிகைகளை காதலித்திருக்கிறார் என்றும் உன்னையும் அப்படி தான் காதலிக்கிறார். அவருடன் நெருக்கமாக வேண்டாம் என கூறி எச்சரித்தும் இருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட கணவர் மறைவுக்கு பின் பிரபுதேவாவை சந்தித்திருக்கிறார் நடிகை மீனா. அவருடன் 90ஸ் காலக்கட்டத்தில் நடித்த பிரபல நடிகைகளுடன் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.