அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும்னு அவசியம் இல்லை!! வெளிப்படையாக பேசிய நடிகை ஓவியா..
மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா கடந்த 2010 -ம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டார். ஓவியாவின் செயல்பாடுகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கென ஒரு ஆர்மி ஒன்றை ஆரம்பித்து ட்ரெண்டு செய்தனர். பிக் பாஸ் பின்னர் அவர் நடித்த 90 ml, காஞ்சனா போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்கள் சுமாரான வரவேற்பை கொடுத்தனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு ஓவியா, சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கதான் செய்கிறது, இதற்காக நான் அனைவரையும் அப்படி சொல்லவில்லை. அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் சினிமாவிற்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை, சினிமா என்பது ஒரு வேலைதான், இந்த வேலை இல்லை என்றால் வேறு வேலை கிடைக்கும்.
அதற்கு பணிந்து போவது தவறு, யாராவது அப்படி கேட்டால் அவர் பற்றி துணிந்து வெளியில் சொல்ல வேண்டும், அப்போது தான் அவர்களுக்கு பயம் வரும். இந்த காலத்தில் பலர் இப்படி நடந்து கொள்வதை பார்க்கும் போது ரொம்பவும் அசிங்கமாக இருக்கிறது.
18 வயது பெண்களுக்கு எதுவுமே தெரியாது, அந்நேரத்தில் சிலர் மிஸ் யூஸ் செய்வார்கள். பின் வயசாக பல விஷயங்களை நாம் புரிந்து அதற்கேற்க நடப்போம். இப்போது இருக்கும் பெண்கள் தைரியமான பெண்களாக இருக்கிறார்கள் என்று ஓவியா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.