40 வயதில் முத்தழகின் குறையாத கிளாமர்!! நடிகை பிரியா மணியின் க்யூட் புகைப்படங்கள்..
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 2004ல் வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா மணி. இப்படத்தினை தொடர்ந்து மலையாலம், தமிழ் மொழிகளில் நடித்து வந்த பிரியா மணிக்கு 2007ல் வெளியான பருத்திவீரன் படம் மிகப்பெரிய இடத்தினை கொண்டு சென்றது.
அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பு அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் தமிழ் படங்களில் நடிக்க சரியான வாய்ப்பில்லாமல் கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி 1000 கோடிக்கும் மேல் வசூலித்த ஜவான் படத்தின் லட்சுமி ரோலில் நடித்திருந்தார். பின் ஆர்ட்டிகல் 370, மெய்தீன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
40 வயதான பிரியா மணி இணையத்தில் ஆக்டிவாக இருந்து க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்த 69வது பிலிம்ஃபேர் விருதில் கலந்து கொண்டுள்ளார். மாடர்ன் ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் நடிகை பிரியா மணி.





