கணவரை பிரிந்ததும் அந்த இடத்தில் அதை செய்த ரச்சிதா மகாலட்சுமி!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசு பொருளாக மாறியது.
தன் கணவருடன் சேருவது என்பது நடக்காத ஒன்று என்று கூறும் அளவிற்கு ரச்சிதாவின் போக்கு சென்று கொண்டிருக்கிறது. அதன்பின் தன் வேலையில் பிஸியாக இருந்து வரும் ரச்சிதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் தனிமை பற்றிய விசயங்களையும் பகிர்ந்து வந்தார்.
தற்போது கன்னட படத்தில் நடித்துள்ள ரச்சிதா, அதன்பின் கிளாமர் ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மாடர்ன் ஆடையணிந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அதோடு தன் கணவர் தினேஷ் பெயரை கையில் டாட்டூ குத்தியதை அழித்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு டாட்டூவை பதித்து இருக்கிறார் ரச்சிதா மகாலட்சுமி.