கதையை எப்போதும் கேட்பதில்லை, ஆனா... ஓப்பனாக பேசிய அமரன் பட நடிகை சாய் பல்லவி..

Sivakarthikeyan Sai Pallavi Raaj Kamal Films International
By Edward Oct 08, 2024 04:45 PM GMT
Edward

Edward

Report

சாய் பல்லவி

மலர் டீச்சராக பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய சாய் பல்லவி, மருத்துவத்தை விட்டுவிட்டு நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.

கதையை எப்போதும் கேட்பதில்லை, ஆனா... ஓப்பனாக பேசிய அமரன் பட நடிகை சாய் பல்லவி.. | Actress Sai Pallavi Talks About Amaran Story Line

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, உலக நாயகன் தயாரிப்பில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்திருக்கிறார்.

படத்தின் பிரமோஷனுக்கு சமீபத்தில் படக்குழுவுடன் இணைந்து பேட்டியளித்து வருகிறார். நான் எப்போதுமே கதைகளை கேட்பதில்லை.

கதையை படித்தவுடன் எனக்குப் பிடித்திருந்தால் நடிப்பதற்கு ஒத்துக்கொள்வேன். ஆனால் அமரன் படத்தின் கதையை படித்தபோது இந்த ரோல் சரியாக திரையில் கொண்டுவர முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

அமரன்

கதையை எப்போதும் கேட்பதில்லை, ஆனா... ஓப்பனாக பேசிய அமரன் பட நடிகை சாய் பல்லவி.. | Actress Sai Pallavi Talks About Amaran Story Line

மேலும் இந்த படத்தின் கதையை ராஜ்குமார் சொல்லும்போது, அப்போது எனக்கு சில சந்தேகங்கள் எழுந்தது.

அதனை ராஜ்குமாரிடம் கேட்டு விளக்கிக்கொண்டதாகவும் இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு கண்டிப்பாக நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று சாய்பல்லவி நெக்ழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.