இனிமே இப்படி தான்.. விவாகரத்துக்கு பின் இப்படியொரு ஷாக் கொடுத்த நடிகை சமந்தா
தமிழ் சினிமாவின் பாணா காத்தாடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின் இரு மொழிப்படங்களிலும் நடித்து வந்தார். கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் சில போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்து அதில் சில சர்ச்சையில் சிக்கியதால் கணவர் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 4 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொள்வதாக கடந்த ஆண்டு விவாகரத்து செய்தியை வெளியிட்டார் சமந்தா.

அதன்பின் படங்களில் க்ளாமர் காட்டியும் புஷ்பா படத்தில் குத்தாட்டம் போட்டு தன் மார்க்கெட்டை உயர்த்தினார். இதனையடுத்து 5 கோடி அளவில் தன் சம்பளத்தை ஏற்றிய சமந்தா தற்போது ஒரு முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இனிமேல் நடிகர்களுடன் நெருக்கம், படுமோசமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க போவதில்லை என்றும் சமுக வலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பதாகவும் முக்கிய முடிவை எடுத்துள்ளாராம்.

மேலும், முத்தக்காட்சி, நெருக்கமான காட்சி, அரைகுறை ஆடை காட்சிகள் என்றெல்லாம் நடிக்க முடியாது என்று தன்னை நாடு இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் கூறி வருகிறாராம்.
இதற்கு சம்மதிப்பவர்கள் படத்திற்கே கால்ஷீட் கொடுத்தும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் நடிக்க முன்னுரிமை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
புஷ்பா படத்தில் அப்படி ஏங்க வைத்து விட்டு தற்போது இப்படியொரு முடிவெடுத்து விட்டாரே என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.