புத்தி இருக்கா! விவாகரத்து பற்றி கேட்ட பத்திரிக்கையாளரை திட்டிய நடிகை சமந்தா..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக நீதானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை சமந்தா. இதையடுத்து தெலுங்கு, தமிழ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு கொடிக்கட்டி பறந்தார். கடந்த 2017ல் காதலித்து வந்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
கல்யாணத்திற்கு பிறகு மற்ற நடிகைகளை போல சினிமாவிற்கு விடை கொடுப்பார் என்ற வதந்திக்கு புற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சூப்பர் டிலக்ஸ் படத்தின் மூலம் ரிஎண்டிரி கொடுத்தார். இப்படத்தின் காட்சிகள் சர்ச்சைக்கு பின் சமீபத்தில் தி பேமிலி மேன் 2 காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விவாத நடிகையாக இருந்து வருகிறார்.
இந்த சர்ச்சை ஆரம்பித்து சில நாட்களில் கணவருடன் கருத்து வேறுபாடு விவாரத்து என்று வதந்தி செய்திகள் வெளியாகியது. தற்போது வரை கணவர் நாக சைதன்யா மற்றும் சமந்தா இதுபற்றி வெளிப்படையாக தெளிவுப்படுத்தாமல் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் சமந்தா கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு ச்மந்தாவிடம் தெலுங்கு பத்திரிக்கையாளர் ஒருவர் விவாகரத்து ரூபர் பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளார்.
அதற்கு சமந்தா புத்தி இருக்கா? இங்க கேட்குற கேள்வியா இது என கடுமையாக திட்டியுள்ளார். அப்படி நடந்து கொண்ட சம்ந்தாவின் அந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது.