மகனுடன் அந்த புகைப்படத்தை வைத்து தப்பா பேசுறாங்க!! கண்ணீர் விட்டு அழுத சீரியல் நடிகை தீபா பாபு..
சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன் என்று சீரியல் நடிகை தீபா பாபு சமீபத்திய பேட்டிகளில் பகிர்ந்துள்ளார். 16 வயதில் திருமணம் செய்து ஆண் குழந்தையை பெற்ற தீபா, கணவரை விவாகரத்து செய்து சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அவர் கூறுகையில், 14 வயதில் நடிகையாக அறிமுகமாகினேன். 16 வயதில் தப்பான வயசுல, தப்பான ஒருவரை, தப்பான நேரத்தில் திருமணம் செய்து கொண்டேன்.
அதன்பின் எனக்கு தப்பான வாழ்க்கையாக, என்னால் அமைந்தது. விருப்பத்துடன் குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார். சமீபத்தில் மகன் இருக்கும் நிலையில் பாபு என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அளித்த பேட்டியொன்றில், இப்படியொரு உலகத்தில் வாழனுமா? என்ற கேள்வி எழுந்த போது என் மகன் தான் நியாபகத்திற்கு வருவான். அவனை வளர்த்து ஒரு ஆளாக்கிவிட வேண்டும் என்பதற்காக உழைத்து வருகிறேன். ஒரு பெண்ணை வேடிக்கை பெண்ணாக பார்க்கும் பல விசயங்களை நான் அனுபவித்து இருக்கிறேன். இப்போ வரைக்குமே என்னிடம் பழகுகிறார்கள். உதவிக்கு சென்றால் அதை தான் கேட்கிறார்கள்.
18 வருட சினிமாவில் இப்படி இருக்க, வேறொரு ரூட்டை எடுத்து இருப்பா என்று கூறுவார்கள். சிறுசிறு ரோலில் நடித்து தான் தீபா என்ற இடத்திற்கு வந்தேனே தவிர, வேறு எதுவும் கிடையாது. பையன் இருக்கும் போது ஏன் கல்யாணம் என்று சொல்பவர்கள் தான் இருக்கிறார்கள். நமக்கு ஒரு வாழ்க்கை துணை வேண்டும் என்று என் அப்பாவும் மகனுடன் ஆசைப்பட்டதால் இரண்டாம் கல்யாணம் பண்ணினேன்.
ஏன் கணவர் புகைப்படத்தை இணையத்தில் பகிரவில்லை என்றால், எங்களுக்கு வெளியில் தெரிவதற்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது. என்னுடைய வேலைக்காகவும், கோயில் சம்பந்தமாகவும், பிரமோஷனுக்காகவும் தான் சமுகவலைத்தளத்தில் இருக்கிறேன். என் மகனை எப்படி வளர்க்கிறேன் என்பது தெரியவும் அதை யோசிக்கிறேன்.
என் பையனுடன் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படத்தில் மோசமாக பேசுகிறார்கள். முதல் தடவை தவறாக பேசிய கருத்தை பார்த்து ஷாக்காகினேன். இப்படியெல்லாம் பேசுவார்களா? உங்கள் அம்மாவை கூடப்பிறந்தவர்களை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்கத்தோன்றும். ஏன் இரண்டாம் வாழ்க்கை முடிவெடுத்தேன் என்றால், ஒரு நபரை நம்பி கல்யாணம் செய்தேன். பையன் மட்டும் நல்லவனாக இருக்காமல் வீட்டில் இருப்பவர்களும் நல்லா இருக்கனும், அப்படி இல்லாதபோது தான் அந்த நினைப்பு வருகிறது என்று தீபா பாபு தெரிவித்திருக்கிறார்.