ஒரேவொரு படம் தான் ஆள் அடையாளம் தெரியாமல் போன பிரபுதேவா பட நடிகை!! கணவர் இந்த நடிகரா..
சினிமாவில் ஒருசில நடிகைகள் வாய்ப்பு கிடைத்த படத்தில் சிறப்பாக நடித்து நல்ல வரவேற்பை பெற்று பெரிய இடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுவார்கள். ஆனால் நடித்த ஒரே படத்தில் திருமணம் செய்தோ அல்லது வாய்ப்பில்லாமலோ காணாமல் போய்விடுவார்கள். அப்படி பாலிவுட் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் பாபி டியோல் நடித்த கரீப் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் சபானா ராசா.
இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் தமிழில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் 2001ல் வெளியான அள்ளித்தந்த வானம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படத்தில் வாடி வாடி நாட்டுக்கட்ட என்ற பாடல் இன்றுவரை பிரபலமாகி அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
அப்படத்தினை தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் இந்தி பக்கம் சென்றுவிட்டார். இதன்பின் வாய்பில்லாமல் இருந்த சபானா, பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பேயை நீண்ட நாளாக காதலித்து வந்துள்ளார்.
இருவரும் ரகசிய தொடர்பில் இருந்த நிலையில், கடந்த 2006ல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் ஒரு மகளை பெற்றெடுத்த சபானா, சினிமாவில் இருந்து விலகி அப்படியே காணாமல் போய்விட்டார்.
சமீபத்தில் தன் கணவர் மனோஜ் பாய்பேயுடன் விருது விழாவிற்கு ஜோடியாக வந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.