திருமணமாகி 3 மாதத்தில் கணவர் கொடுக்கும் டார்ச்சர்!! ரஜினி பட நடிகை ஓப்பன் டாக்..
சோனாக்ஷி சின்ஹா
பாலிவுட் சினிமாவில் பிசியான நடிகையாக வளம் வரும் நடிகை சோனாக்ஷி சின்ஹா, கடந்த 2022ல் டபுள் எக்ஸ் எல் என்ற படத்தில் நடிகர் ஜாகீர் இக்பாலுடன் நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் காதல் 2020ல் இருந்தே துவங்கி பின் டேட்டிங் சென்றனர்.
அதன்பின் இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தப்போது சோனாக்ஷியின் தந்தை சத்ருகன் எதிர்ப்பு தெரிவிக்க நீண்ட போராட்டத்திற்கு பின் மகளின் திருமணத்திற்கு சத்ருகன் சம்பதித்தார். அதற்கு காரணம் இருவரும் வேறுவேறு மதம் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால் திருமணம் மும்பையில் பூஜை புணஸ்காரங்களுடன் தான் இந்து முறைப்படி 3 மாதத்திற்கு முன்நடந்துள்ளது. இந்நிலையில், சோனாக்ஷி தன்னுடைய கணவர் ஜாகீர் இக்பாலுடன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தொகுப்பாளினியின் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
திருமணமாகி 3 மாதத்தில்
கணவரிடம் பிடித்த்து, பிடிக்காதது என்ன என்று கேள்விக்கேட்கப்பட்டது. அதற்கு சோனாக்ஷி, அவரிடம் பிடித்தது தாராள குணம் கொண்டவர், அனைவரிடமும் கனிவுடன் நடந்துகொள்வார். ஆனால் அவரிடம் பிடிக்காதது, அடிக்கடி சத்தம் போடுவது, விசில் அடிப்பதுதான்.
இதனால் வீட்டில் எப்போதும் சத்தமாகவே இருப்பதால் அமைதிக்காக ஏங்குவதாக காமெடியாக சோனாக்ஷி தெரிவித்துள்ளார். திருமணமாகி இப்படியொரு டார்ச்சரை கணவர் செய்கிறாரா என்று கிண்டல் செய்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.