வாய்ப்பில்லாமல் 6 வருடம் காணாமல் போன நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கா இந்த நிலைமை!! ஷாக்காகும் ரசிகர்கள்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013 -ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தை அடுத்து ஜீவா, வெள்ளைக்கார துர, ஈட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்த ஸ்ரீதிவ்யா ரெய்டு என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் கம்பேக் கொடுத்தார்.
அந்த படத்திற்கு ரசிகர்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்க வில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பிரபல நடிகர் இமான் அண்ணாச்சியின் வீட்டு கிரகபிரவேசத்தில், நடிகை ஸ்ரீதிவ்யா அதிக அளவில் மது அருந்தி மோசமாக ஆட்டம் போட்டதாகவும், அதன் பின் போதை தெளிந்த பின்பே அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளிவந்தது.
இந்த விஷயத்துக்கு பின் ஸ்ரீதிவ்யா சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்த மாதிரியான சர்ச்சையில் சிக்கியதால் தான் தனக்கு பட வாய்ப்பு போனதால் இனி சினிமாவில் அவர் முன்னணி நடிகை இடத்தை பிடித்த பின்னரே திருமணம் செய்து கொள்வேன் என்றும் அதுவரை திருமணம் இல்லை என்றும் முடிவு எடுத்து இருக்கிறாராம்.
இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் 26 படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஃபேமிலி செண்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆனால் கார்த்தி-க்கு ஜோடியாக நடிக்காமல் அவருக்கு தங்கையாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
