திருமண வாழ்க்கையில் ஏமாற்றம்!! விவாகரத்து செய்து இரண்டாம் கல்யாணம் செய்ய இதான் காரணம்!! நடிகை ஸ்ரீதிகா..
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை ஸ்ரீதிகா. நாதஸ்வரம், மகராசி, குலதெய்வம் உள்ளிட்ட பல சீரியகலில் நடித்துள்ள ஸ்ரீதிகா, மகராசி சீரியலில் நடித்த நடிகர் ஆரியனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆரியனுக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றிருந்தார்.
ஆரியன் திருமணத்திற்கு ஸ்ரீதிகா தன் முதல் கணவருடன் சென்றிருந்தார். அதன்பின் முதல் கணவரை விவாகரத்து செய்த ஸ்ரீதிகா இரண்டாம் திருமணம் செய்த நிலையில், விவாகரத்து செய்ய காரணம் என்ன என்று கூறியிருக்கிறார். அவர் நல்ல மனிதர் தான் அவர் மீது எந்த குறையும் சொல்ல முடியாது.
ஆனால் எனக்கும் அவருக்கும் திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. ஆரம்பத்தில் சரியாக்விடும் என்று இருவரும் நினைத்தோம். அது நாளாக நாளக விரிவடைந்து கொண்டே சென்றது. சின்ன வயதில் திருமணம் செய்து கொள்ளவில்லை, 30 வயதிற்கு மேல் தான் வீட்டில் பார்த்து முதல் திருமணம் செய்து வைத்தார்கள்.
ஆனால் நான் எதிர்ப்பார்த்தது போல் திருமண வாழ்க்கை எனக்கு இல்லை. அதில் பெரிய ஏமாற்றம் கிடைத்தது. கருத்து வேறுபாடுகள் எனக்கும் அவருக்கும் நிறைய இருந்ததால் இருவரும் பேசி தனித்தனியாக பிரிந்துவிடலாம் என்று நினைத்தோம்.
இயற்கை குணத்துடன் இருக்க வேண்டும், நமக்காக அவர்களை மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்யக்கூடாது. அதனால் தான் அவரைவிட்டு விலகியதாகவும் ஆரியனுக்கும் அவரது முன்னாள் மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்ததால் தான் ஒத்துப்போகவில்லை என்று பிரிந்துவிட்டதாகவும் நடிகை ஸ்ரீதிகா தெரிவித்துள்ளார்.