திருமணமாகி ஒரே வருஷத்தில் விவாகரத்து!! வைரலாகும் நடிகை சுகன்யாவின் புகைப்படம்
பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாக புது நெல் புது நாத்து படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை சுகன்யா. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்தார்.
2002ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரே ஒரு வருடத்தில் 2003ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
ஒரு அரசியல்வாதியின் கட்டுபாட்டில் இருந்ததால் தான் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்ததாகவும் அவரால் தான் பாதி வாழ்க்கை நாசமாகிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சமுகவலைத்தளத்தில், தன் சிறு வயதில் சகோதரியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகை சுகன்யாவா இது என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
