ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.. எனக்கும் ஆசையா இருக்கு!! நடிகை வாணி போஜன் ஓப்பன் டாக்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் திகழ்ந்து வரும் நடிகர் விஜய் சமீபகாலமாக அரசியல் நுழைவு குறித்த வேலைகளில் ஈடுபட்டு வந்தார். அந்தவகையில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கி அறிக்கை வெளியிட்டு இன்ப அதிர்ச்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்தார். விஜய்யின் அரசியல் குறித்து பொதுமக்களும் சரி அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள் உட்பல பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில் சமீபத்தில் நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நடிகை வாணி போஜனும் விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். அரசியலுக்கு நாம் தான் வருவேண்டும் என்பதெல்லாம் கிடையாது யாரு வேண்டுமானால்ம் வரலாம். யார் நல்லது பண்ணலாம் என்று நினைப்பவர்கள் எல்லாம் வரலாம்.
செங்கலம் படத்தில் நடித்த போது சத்தியமாக சொல்கிறேன் அரசியலுக்கு வர ஆசையாக இருந்தது என்று கூறியிருக்கிறார். கூடிய சீக்கிரம் அரசியலில் பார்க்கலாமா என்ற பத்திரிக்கையாளர் கேள்விக்கு அய்யோ ஏங்க அப்படியெல்லாம் இல்லை. கூடிய சீக்கிரமா என்றெல்லம் தெரியாது, ஆனால், அந்த சீரிஸ் பண்ணும் போது இருந்தது இப்பவும் இருக்கிறது, இல்லை என்று சொல்லவில்லை என்று தெரிவித்தார்.
விஜய், விஷால் வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என்றதற்கு, அதான் சொல்கிறேன், யார் வேண்டுமானாலும் வரலாம், விஜய் அரசியலுக்கு கண்டிப்பாக வரட்டும், அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம், அவர் என்ன பண்றாருன்னு பார்க்கலாம், எல்லாமே நம்ம கையில் தானே இருக்கிறது என்று வாணி போஜன் தெரிவித்துள்ளார்.