அட்லீ மனைவியின் குறையாத கிளாமர்!! குழந்தை பெற்ற பின் போட்டோஷூட்டில் நடிகை பிரியா மோகன்..
தமிழ் குறும்படங்களில் கதாநாயகியாக நடித்து திரைப்படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா மோகன். பல ஆண்டுகளாக நண்பராக இருந்த இயக்குனர் அட்லீ குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜா ராணி படத்திற்கு பின் அட்லீயை திருமணம் செய்து அவருக்கு துணையாக இருந்த பிரியா கணவருடன் ஜவான் படத்தின் ஷூட்டிங் சமயத்தில் பல ஆண்டுகளாக மும்பையில் செட்டிலாகினார்.
அதன்பின் திருமணமாகி 9 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் பிரியா. அவர்கள் பெற்றோர்கள் ஆனதை பலர் பாராட்டியதை போன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானும் வாழ்த்து தெரிவித்தார்.
ஜவான் படத்தின் 1000 கோடி வசூலை தொடர்ந்து பாலிவுட்டில் அட்லீ மிகப்பெரியளவில் பேசப்பட்டார். இதனை தொடர்ந்து பல இடங்களுக்கு த கணவருடன் ஜோடியாக சென்றும் போட்டோஷூட் எடுத்தும் வருகிறார் பிரியா.
தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி இளசுகளை கவரும் வண்ணம் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கேண்டி கிரஸ் என்று பதிவிட்டு கிளாமர் ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.