இரட்டை குழந்தை பெற்ற நடிகை நமீதா!! திருமணம் முடிஞ்சி கணவர் செய்த செயல்..
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னி நடிகையாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை நமீதா, முன்னணி நடிகர்கள் விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய், அர்ஜுன், சுந்தர் சி உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து பிரபலமான நமிதா ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். மச்சான்ஸ் என்று அழகாக கூப்பிட்டு வந்த நமீதா பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 28 நாட்கள் மட்டுமே வீட்டில் இருந்து வெளியேறினார்.
பிக்பாஸ் முடிந்த கையோடு சில மாதங்களில் காதலித்து வந்த தொழிலதிபர் வீரேந்திரா செளத்ரி என்பவரை திருப்பதியில் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் 4 ஆண்டுகள் கழித்து நமிதா கர்ப்பமாகி 2022ல் இரட்டை ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு தன் கணவருடன் பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை நமீதா.
அதில் நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி கூப்பிடுவீர்கள் என்ற கேள்விக்கு வீரேந்திரா, ஜான்(உயிர்) என்று நமிதாவை கூப்பிடுவேன் என்றும் நமீதா, நான் அவரை சாமி என்று கூப்பிடுவேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு காரணம், திருமணம் முடிந்து 2018ல் ஐயப்பன் சாமிக்கு சபரிமாலை போட்டுவிட்டார்.
ரெண்டு மாசம் என் பக்கத்தில் வரக்கூடாது, பேபி, ஜான் என்று கூப்பிடாதே, சாமி என்று கூப்பிடு என்று கூறிவிட்டார். அதனால் தான் அவரை சாமி என்று கூப்பிட ஆரம்பித்தேன் என்று நமீதா தெரிவித்துள்ளார். இதனை கேட்ட தொகுப்பாளர், நமீதாவை கல்யாணம் பண்ணிட்டு ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு ரெண்டு மாசம் விருதம் இருந்திருக்கிறார் என்றால் இவரைவிட கட்டுப்பான ஆள் நமீதா மேம்க்கு கிடைக்காது என்று கலாய்த்திருக்கிறார்.