24 ஆண்டுகள் தனிமை..எனக்கும் துணை வேண்டும்!! இயக்குநர் பார்த்திபனுக்கு திருமணமா?
பார்த்திபன் - சீதா
இயக்குநர் பார்த்திபன் - சீதா தம்பதியினர் கடந்த 1990ல் காதலித்து திருமணம் செய்து அபிநயா, கீர்த்தனா என்ற இரு மகள்களையும் ராதாகிருஷ்ணன் என்ற மகனையும் பெற்றெடுத்தனர். அதன்பின் இருவரும் 2001ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

இதனையடுத்து நடிகை சீதா, சதீஷ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் பார்த்திபன் விவாகரத்தாகி கிட்டத்த 24 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
எனக்கும் துணை
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில் தனது தனிமை மற்றும் எதிர்காலத்திட்டம் குறித்து பகிர்ந்துள்ளார். அவரின் இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்தநிலையில் தன்னுடைய மகன் ராதாகிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், மகன் திருமணத்திற்கு பின் அவன் தன்னுடையை வாழ்க்கயை தொடங்கிவிடுவான், அதன்பின் வீட்டில் நான் முற்றிலும் தனிமையாகிவிடுவேன். அப்போது எனக்கென ஒரு துணை தேவை.
தனக்கு வரப்போகும் துணை வெறும் மனைவியாக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த புரிந்தல் உள்ள தோழியாக இருக்கவேண்டும், வாழ்க்கையி பிற்பகுதியில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது அவசியம் என்று தன்னுடைய விருப்பத்தை இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.