கேப்டனுக்கு செய்த துரோகம்!! பரிகாரமாக விஜயகாந்த் மகனுக்கு வடிவேலு செய்யப்போகும் செயல்..
சினிமாவில் கொடிக்கட்டி பறந்த வைகைப்புயல் வடிவேலு, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி வீட்டிலேயே முடங்கி தலையை வெளியில் காட்டாமல் இருந்து வந்தார். அதற்கு காரணம் கேப்டன் விஜயகாந்தை பற்றி தப்பாக பேசி தனக்குத்தானே பிரச்சனையை இழுத்துக்கொண்டது தான்.
மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் வடிவேலு, விஜயகாந்த் பக்கமே செல்லாமல் இருந்து வந்தார். தன்னை அறிமுகப்படுத்தி தூக்கி நிறுத்திய கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு கூட வராமல் பலரின் கோபத்திற்கு ஆளாகினார் வடிவேலு. அவரின் மறைவிற்கு பின் ஒரு வாரம் வெளியில் வராமல் இருந்த வைகை கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு மட்டும் சென்று அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
இந்நிலையில், தான் செய்த தவறுக்கு பரிகாரம் செய்யும் விதமாக ஒரு சம்பவத்தை செய்யவிருக்கிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் கேப்டன் மகன் விஜய பிரபாகரன் வேட்பாளராக நிற்கிறார்.
அதேசமயம் அதே தொகுதியில் திமுக கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறேன் என்று வாக்கும் கொடுத்துள்ளார் வடிவேலு.
இப்படி இருக்க, விருதுநகர்
தொகுதியில் கேப்டன் மகனை விமர்சித்து பேச வேண்டும்
என்பதால் அந்த தொகுதிக்கு மட்டும் தான் போக மாட்டேன்
என்று விருதுநகர் தொகுதியை ஒதுக்கிவிட்டாராம்.
விஜயகாந்துக்கு நன்றி கடன் செய்யும் விதமாக இப்படியொரு
முடிவை வடிவேலு எடுத்திருக்கிறார்.