காலில் விழுந்த குஷ்பூ.. தலைக்கனத்தில் மூஞ்சில முழிக்க மாட்டேன்னு சொன்ன வைகைப்புயல்..
தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்றே பேர் போன நடிகராக தனக்கென தனி முத்திரை பதித்தவர் தான் நடிகர் வடிவேலு. பல ஆண்டுகள் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் சுந்தர் சி படத்தில் இணையவுள்ளாராம். ஏற்கனவே தான் நடிக்கவிருந்த ஒரு படத்தில் அவரை கேட்காமல் அந்த ரோலுக்கு சந்தானத்தை நடிக்க வைத்ததால் வடிவேலு மிகவும் கோபப்பட்டு சண்டை போட்டிருக்கிறார்.
இதனால் சுந்தர் சி-க்கும் வடிவேலுவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சமீபத்தில் நடிகை குஷ்பூ அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார். அதில் இருந்து சுந்தர் சி படத்தில் இனி நடிக்கமாட்டேன் என ஒரு முடிவை எடுத்திருக்கிறாராம். அவர் மூஞ்சியில் முழிக்கமாட்டேன் என்று இருந்த வடிவேலுவிடம் நடிகை குஷ்பூ.
சமாதானம் செய்தும் வடிவேலுவை காம்ப்ரமைஸ் செய்யமுடிவில்லையாம். தற்போது அதையெல்லாம் மறந்து சுந்தர் சி இயக்கும் படத்தில் வடிவேலு நடிக்கவுள்ளாராம். அரண்மனை 4 படத்திற்கு பின் கலகலப்பு 3 படத்தை இயக்க முடிவில் இருந்துள்ளார் சுந்தர் சி.
ஆனால் அரண்மனை 4 படத்தில் மிகப்பெரிய வெற்றியால் அடுத்த 5வது பார்ட்டை எடுக்க திட்டமிட்டு அதன்பின் கலகலப்பு 3 படத்தை இயக்கவுள்ளாராம். அரண்மனை 5ல் சுந்தர் சி ஹீரோவா நடிப்பதால், அதில் தான் வடிவேலு நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொறுப்பு துறப்பு : குறித்த தகவலை பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் வீடியோவில் பகிர்ந்து கொண்ட தகவலை தான் விடுப்பு தளத்தில் பதிவு செய்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.