16 வருட திருமண வாழ்க்கைக்கு எண்ட்கார்ட்-ஆ!! ஐஸ்வர்யா ராய் சொன்னது நடந்துருச்சோ...
1994-ன் உலக அழகி பட்டத்தை வென்றவராகவும் இந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். மணிரத்னமால் அறிமுகம் செய்யப்பட்டு இந்திய சினிமாவில் பல மொழிகளில் நடித்து பெரிய அந்தஸ்த்தை பெற்று வந்தார். கடந்த 2007ல் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி சினிமாவில் இருந்து விலகி ஆராத்யா என்ற மகளையும் பெற்று வளர்த்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் நடிப்பில் கவனம் செலுத்திய ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்த போது அவர் விரல் மோதிரம் போட்டதில் இருந்து எப்போது மோதிரம் இல்லாமல் வந்ததில்லை. ஆனால், சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மோதிரம் இல்லாமல் வந்துள்ளார்.
இதனால் ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனும் சண்டை அதனால் இருவரும் பிரியப்போகிறார்களோ என்ற சந்தேகம் எழுத்திருக்கிறது.
ஏற்கனவே ஒரு பேட்டியொன்றில், நாங்கள் தினமும் சண்டை போடுவதாக ஐஸ்வர்யா ராய் கூற அது சண்டை இல்லை, கருத்து வேறுபாடு ஏற்படுவதாகவும் அபிஷேக் பச்சன் கூறியிருந்தார். இதை வைத்து தான் இருவரும் சண்டை போட்டு வருவதால் பிரியப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாம்.