ஐஸ்வர்யா ராயின் பிரசவத்தில் இருக்கும் ரகசியம்..அமிதாப் பச்சன் கூறிய ஷாக்கிங் விஷயம்
ஐஸ்வர்யா ராய்
உலக அழகி என்ற பட்டத்தை வென்ற பிறகு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜீன்ஸ் படத்தில் கதாநாயகியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் பாலிவுட் முன்னணி நடிகரான அபிஷேக் பச்சன் என்பவரை 2007 - ம் ஆண்டு காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
அமிதாப் பச்சன் கூறிய விஷயம்
இந்த ஜோடிக்கு 2011 - ம் ஆண்டு ஆராத்யா என்ற மகள் பிறந்தார். இந்நிலையில், ஆராத்யா பிறந்தபோது நடந்த சம்பவத்தை குறித்து அமிதாப் பச்சன் பகிர்ந்துள்ளார்.
அமிதாப் பச்சன் அவ்வப்போது அவர் மருமகளான ஐஸ்வர்யா ராய் குறித்து புகழ்ந்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், "ஆராத்யா பிறக்கும்போது ஐஸ்வர்யா எந்த விதமான வலி நிவாரணத்தையும் எடுத்துக்கொள்ளாமல் 2 முதல் 3 மணி நேரம் வரை பிரசவ வலியை தாங்கினார்.
அது அவருக்கு மிகவும் கடினமானதாக அமைந்தது இருப்பினும், அவர் இயற்கை பிரசவத்தை தேர்ந்தெடுத்தார். அதற்கு நான் அவரை பாராட்டுகிறேன். தன் அம்மா ஐஸ்வர்யா போல தான் ஆராத்யா மிகவும் தைரியமான, இயல்பான குணம் கொண்டவர்" என கூறியுள்ளார்.