Honeymoon-ல் தான் அந்த விஷியத்தை உணர்ந்தேன்!! வெளிப்படையாக பேசிய ஐஸ்வர்யா ராய்
Aishwarya Rai
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1997 -ம் ஆண்டு வெளியான இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் கடந்த 2007 -ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் ஒரு பேட்டி ஒன்றில், ஹனிமூனுக்கு போராவுக்கு விமானத்தில் சென்றோம். அந்த சமயத்தில் விமான பணிப்பெண் ஒருவர் என்னை பார்த்து, திருமதி பச்சன் என சொன்னார்.
அப்போது தான் நானும் அபிஷேக் பச்சனும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தோம். எனக்கு திருமணம் ஆனதை அப்போது தான் உணர்ந்தேன். திருமதி பச்சன் ஆகிவிட்டதையும் அப்போது தான் ஞாபகம் வந்தது என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.