உறவை கெடுத்துவிடும்.. கடுப்பாகி இயக்குனருக்கு பதிலடி கொடுத்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜெஷ், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த பல படங்கள் தோல்வியை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் பற்றி இயக்குனர் வீரபாண்டியன் கோபமாக பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அவர்களும் இவர்களும் என்ற படத்தில் தான் இயக்குனர் வீரபாண்டியன், ஐஸ்வர்யா ராஜேஷை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
ஆட்டோவுக்கு கூட காசு கொடுக்க முடியாத நிலைமையில், அப்படத்தின் வாய்ப்பு கேட்க வந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். நடிக்க தெரியாது, ஆட வராது, அப்படியிருந்தும் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்ததாகவும் ஆரம்பத்தில் பல மேடைகளில் என் பெயரை கூறிவந்தாலும் ஒரு கட்டத்தில் பெரிய இடத்திற்கு வந்ததும் நன்றி மறந்துவிட்டார்.
ஓவர் ஆட்டிட்டியூட் காட்டி வருவதாகவும் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதையறிந்த ஐஸ்வர்யா ராஜேஷ், நிறைய பேர் ஒரு பக்கம் இருக்கும் கதையை மட்டும் கேட்டு பேசுகிறார்கள்.

ஹீரோயின் வாய்ப்பு தாரேன் சொல்லி 2 நாள் என்னை .. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்
நடந்தது என்ன என்று தெரிந்து கொள்ளாமல் ஒரு முடிவுக்கு வருவது வாழ்க்கை மற்றும் உறவினை கெடுத்துவிடும். ஒருவர் மீது தவறான குற்றச்சாட்டை கூறும் முன் மொத்த கதையையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறார்.