சிங்கிள் தான் பாதுகாப்பு.. தனுஷுடன் சேர வாய்ப்பே இல்லையா.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டி

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Actors
By Dhiviyarajan Feb 11, 2024 04:57 AM GMT
Report

கடந்த 2004 -ம் ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் - ஐஸ்வர்யா பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை இரண்டு பேரும் விவாகரத்து பெறவில்லை.

சிங்கிள் தான் பாதுகாப்பு.. தனுஷுடன் சேர வாய்ப்பே இல்லையா.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேட்டி | Aishwarya Rajinikanth Answer Marriage Life

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த், " கடந்த இரண்டு வருடங்களாக தனிமை என்னை அதிகமாக ஆட்கொண்டு இருக்கிறது. எனக்கு தனிமை ரொம்ப பிடிக்கும். தனியாக இருப்பவர்கள் பாதுகாப்பான மனிதர்கள் என்பதைத்தான் இந்த இரண்டு வருடங்களில் உணர்ந்துவிட்டேன்".

"வை ராஜா வை திரைப்படத்திற்கு பின் சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க காரணம் என்னுடைய குழந்தைகள் தான்" என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனியாக இருப்பது தான் பாதுகாப்பு என்று கூறியிருக்கிறார். தனுஷுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்பதை தான் மறைமுகமாக சொல்லிவிட்டாரோ என்று ரசிகர்கள் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.