என் மேல் அந்த உணர்ச்சி இல்லன்னா, கெஞ்சனும் அவசியம் இல்ல!! விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நட்சத்திர தம்பதிகளாக இருந்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிரிவை கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தனர். இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. பிரிவை அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த வாரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட்டனர். 2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விசயம் அதிகமாக பேசப்பட்டு வந்த நிலையில் ரஜினிகாந்த் மகல் ஐஸ்வர்யா சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்த ஒரு பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இன்ஸ்டகிராம் பதிவில் ஐஸ்வர்யா, வாழ்க்கையில் சில விசயங்களை பார்க்கும் போது நமக்கு பிடித்தவாறு இருக்கும். அந்த விசயம் நமக்கு கிடைத்தப்பின் நம்மிடம் வந்து சேர்ந்த பின், எப்போது அது நமக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினைப்போம், ஆனால் அப்படி நினைக்கும் அந்த எதிர்பார்ப்பு பல நேரங்களில் பொய்யாகிவிடும் என்றும் அதனால் அந்த விசயத்தில் நம்முடைய எதிர்பார்ப்பை மாற்றுக்கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் நாம் விரும்பும், அன்பு கூறும் சில மனிதர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு சூரியனை போல் அவர் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வர நினைப்போம். ஆனால் அந்த நேரம், வெளிச்சத்துக்கு இடையூராக மழை வந்துவிட்டால், நாம் காட்டிய அன்பை வெறுத்து விடுவார்கள். மழை வந்தலும் நம்ம வெறுத்தாலும் அவர்கள் மீது நம் அன்பை குறைத்துக்கொள்ளக்கூடாது என்று தனது கருத்தை பதிவாக பகிர்ந்திருக்கிறார்.
விவாகரத்துக்கு சட்டரீதியாக சென்று சில நாட்களில் ஐஸ்வர்யா இந்த பதிவினை எதற்காக போட்டிருக்கிறார். அதுவும் என் மேல் அந்த காதல் உணர்ச்சி இல்லை என்றால் கெஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்ற மறைமுக கருத்து வாயிலாக ஐஸ்வர்யா என்ன சொல்ல வருகிறார் என்று பலர் யோசித்து வருகிறார்கள்.
You May Like This Video