மணிரத்னம்-ஆல் தன்னைத்தானே செருப்பால் அடிச்சிக்கிட்டேன்!! லட்சுமி மகள் நடிகை ஐஸ்வர்யா..
தென்னிந்திய சினிமாவில் 60களில் இருந்து ஆரம்பித்து 90கள் வரை கொடிக்கட்டி பறந்த நடிகை நடிகை லட்சுமி. ஸ்ரீ வள்ளி என்ற படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். பாஸ்கரனை என்பவருடன் 6 ஆண்டுகள் வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பின் மோகன் சர்மாவை திருமணம் செய்து 5 ஆண்டுகளுக்கு பின் பிரிந்தார். இதனை அடுத்து 7 ஆண்டுகள் கழித்து சிவசந்திரன் என்பவருடன் லட்சுமி வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் முதல் கணவர் பாஸ்கரனுக்கு பிறந்தவர் தான் லட்சுமியின் மகள் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர். சினிமாவில் மகளையும் அறிமுகம் செய்து வைத்த லட்சுமி, தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா சமீபத்தில் பேட்டியொன்றில் சில சம்பவங்களை பகிர்ந்திருக்கிறார். சமீபத்தில் ரோஜா பட மிஸ் ஆனதால் நான் செருப்பால் அடித்துக் கொண்டேன் என்று நீங்கள் கூறிய வைரலாகி வருகிறது என்ற கேள்விக்கு ஐஸ்வர்யா பதில் அளித்திருக்கிறார்.
இந்த விசயம் 4, 5 வருடத்திற்கு முன் சொன்னது. என் படத்தினை கமிட் செய்வது என் பாட்டி தான். அப்போது தெலுங்கு படத்தில் நடிக்க என்னை கமிட் செய்திருக்கிறார் பாட்டி. நாளை ஹைதராபாத் செல்ல வேண்டும். முதல்முறை மணிரத்னம் தளபதி (1991) படத்தில் நடிகை ஷோபனா ரோலில் நடிக்க தான் கேட்டார். அப்போது ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டு டேட் இல்லை என்று பாட்டி கூறிவிட்டார், அது போச்சி.
அதேபோல் இரண்டாம் முறை தெலுங்கு படத்தில் கமிட்டாகிய போது ரோஜா (1992) பட வாய்ப்பு வந்தது. அப்போது தெலுங்கு படத்தில் கமிட்டாகினோம். அப்போது ரோஜா படத்திற்காக கேட்ட போது தெலுங்கு படத்திற்காக 40 நாள் டேட் கொடுத்திருக்கிறோம். பின் படமே நின்னு போச்சி. அதன்பின் ரோஜா படம் வெளியாகி நான், அப்பா, பாட்டி பார்த்தோம். ருக்குமணி என் பாட்டி பெயர் என்பதால், ரோஜா படத்தின் ருக்குமணி பாடல் கேட்கும் போது கோபத்தில் இருந்தேன்.
பின் புதுவெள்ளை மழை பாடல் போகும் போது வியப்பில் இருந்தேன். கோயம்பத்தூர் சென்று அப்பா அப்பார்ட்மெண்ட் போய்விட்டு செருப்பை எடுத்து அடித்துக்கொண்டேன். அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடி (1993) படத்தில் நடிக்க டெஸ்ட்டே நடந்தது. அப்போது தான் ஜாக்கி ஷ்ராஃப் நடித்த கர்த்தீஷ் இந்தி படத்திற்கு டேட் கொடுத்திருக்காங்க.
மணிரத்னம் அங்கிளை பல முறை பார்த்திருக்கிறேன் என்று ஐஸ்வர்யா தெரிவித்திருக்கிறார். மேலும் தேவர் மகன் படத்தில் நானும் மீனாவும் கமிட்டாகினோம். திடீரென காஸ்ட் மாறியது. ஆறு படத்தில் நான் நடிக்கவிருந்தது, கதையை எனக்காக ஹரி மாறியதால் நடித்தேன் என்றும் கூறியிருக்கிறார்.