நடிகருடன் 2ஆம் திருமணம்..5 வருடமாக வாய்ப்பில்லை!! ஆனால் ரூ.700 கோடிக்கு அதிபதி அஜித் நடிகை...
நடிகர் அஜித்தின் சினிமா வாழ்க்கையில், மிகப்பெரிய ஹிட் கொடுத்த படமாக இருந்த ஒன்றுதான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டே படம். அஜித்துடன் இப்படத்திலும் சரத்குமாருடன் ஒருவன் படத்திலும் நடித்த நடிகை இப்போது 5 ஆண்டுகளாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும் அவரின் சொத்து மதிப்பு வாயை பிளக்க வைக்கிறது. அவர் தான் நடிகை பூஜா பத்ரா.

நடிகை பூஜா பத்ரா
உத்தரபிரதேசத்தில் பிறந்த பூஜாவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி, தாய் நீலம் பத்ரா மிஸ் இந்தியா போட்டியில் 1971ல் பங்கேற்றவர். தாயைப்போல் 1993ல் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று ரன்னர் அப் இடத்தினை வென்றார்.

விளம்பர உலகிலிருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர் பெரிய நட்சத்திரமாக உருவெடுத்தார். பாலிவுட்டில் விராசாட் என்ற படம் அவருக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. பின் மலையாளத்தில் மம்மூட்டியுடன் மேகம், மோகன்லாலுடன் சந்திரலேகா போன்ற படங்களில் நடித்தார்.
30க்கும் மெற்பட்ட படங்களில் நடித்த பூஜா, உச்சத்தில் இருந்தபோதே 2002ல் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் சோனு அலுவாலியாவை திருமணம் செய்து கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டிலாகினார். ஆனால் அந்த வாழ்கை நீண்ட காலம் நீடிக்காமல் 2011ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன்பின் இந்தியாவுக்கு திரும்பிய பூஜா, சினிமாவில் பெரிய வாய்ப்புகள் அமையவில்லை. அவரின் வாழ்க்கையின் இரண்டாம் பாதியில் 2019ல் நடிகர் நவாப் ஷாவை ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
ரூ.700 கோடி
4 ஆண்டுகளாக அவருக்கு எந்த வாய்ப்புகளும் இல்லை என்றாலும் ஆடம்பர வாழ்க்கைக்கு பெயர் போனவரானார்.
அதற்கு காரணம், நடிகையாக மட்டுமில்லாமல் தொழிலிலும் பூஜா பத்ரா கவனம் செலுத்தி 2009ல் க்ளோபெல்லிங்க் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதோடு, அமெரிக்காவின் முன்னணி இந்தி வானொலி நிலையமான மேரா சங்கீத் -எல் ஏ நிறுவனத்திலும் கூட்டாளியாக இருக்கிறார்.
50+ வயதை கடந்திருக்கும் பூஜா பத்ராவின் சொத்து மதிப்பு சுமார் 77 மில்லியன் டாலர் என கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் அவருக்கு சுமார் ரூ. 700 கோடி வரை சொத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.