அஜித், நயன்தாரான்னு இல்லை.. யாரா இருந்தாலும் அதை பண்ணனும்!! புலம்பித்தள்ளிய ஆர் கே செல்வமணி..
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து தற்போது ஃபெப்சி சங்கத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார் ஆர் கே செல்வமணி. சமீபத்தில் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் ஏழுமலை எனும் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த நிலையில் இந்தியன் 2 படத்திலிருந்து சர்தார் 2 வரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறியிருக்கிறார்.
மேலும், நடிகர், நடிகைகள் படத்தின் பிரமோஷன்களை தவிக்க கூடாது. படத்தில் நடிப்பது மட்டும் அவர்களின் கடமை இல்லை, பிரமோஷன் செய்து படத்தை ஓட வைப்பதும் நடிகர்களின் கடமை என்றும் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தின் ஹீரோவாக நடித்த அசோக் செல்வன் படத்தின் பிரமோஷனுக்கு வராத நிலையில் தயாரிப்பாளர் மேடையில் புலம்பி இருந்தார். அசோக் செல்வன் வந்திருக்க வேண்டும் என்று கூறிய ஆர் கே செல்வமணியிடம் அஜித், நயன் தாரா எல்லாம் வருவதில்லையே என்ற கேள்வி எழுந்தது.
அஜித், நயன் தாரான்னு எல்லாம் இல்லை, யாராக இருந்தாலும் கண்டிப்பாக தங்கள் படத்தினை பிரமோட் செய்ய வேண்டும் அது அவர்களின் கடமை என்றும் கூறியிருக்கிறார்.