அஜித்தின் நிறைவேறாத ஆசை..உண்மையை உடைத்த மறைந்த இயக்குனரின் மனைவி..
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் ஏகே61 படத்தின் படப்பிடிப்பிலும் தன் தனிப்பட்ட பணிகளிலும் பிஸியாக இருந்து வருகிறார். அஜித்திடம் பல இயக்குனர்கள் கதை கூறி கால்ஷீட் வாங்க ஆசைப்படுவார்கள்.
ஆனால் அஜித் மலையாள படம் ஒன்றினை பார்த்து அந்த இயக்குனருடன் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறாராம். கடந்த 2020 ஆம் ஆண்டு மலையாள படமாக வெளியாகி படம் அய்யப்பனும் கோஷியும். பிரித்விராஜ், பிஜூ மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படத்திற்காக 4 பிரிவுகளின் கீழ் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இய்க்குனர் சச்சிதானந்தம் இயக்கத்தில் மலையாளம் உட்பட தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் வரவேற்பு பெற்றது. அதன்பின் பவண் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது.
அஜித் இப்படத்தினை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குனர் சச்சிதானந்தம் அவர்களுக்கு கால் செய்து பேசியுள்ளார். உங்களுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்றும் அப்படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்ததாகவும் சச்சி அவர்களின் மனைவி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்போது சச்சி உடல் நலக்குறைவால் அப்போது சிகிச்சையில் இருந்தார். உங்களை பார்க்க வேண்டும் என்று கூறிய அஜித்திடம் நானே வந்து பார்க்கிறேன் என்று கூறி இருக்கிறார் சச்சி. ஆனால் சச்சி அவரை பார்க்காமலே மறைந்துவிட்டார். அஜித்தின் இந்த ஆசை நிறைவேறாமல் போயுள்ளது.