போதையில் காதலுடன் காரில் தாறுமாறாக ஓட்டி விபத்து! விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை செய்த செயல்

Kerala Gossip Today Indian Actress
By Edward Jul 29, 2022 02:30 PM GMT
Report

மலையாள சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நடிகை அஸ்வதி பாபு. அதுமட்டும் இல்லாமல் சில ஆண்டுகளுக்கு முன் அவரது வீட்டில் போதை பொருள் இருப்பதாக திற்காக்கரை போலிசார் சென்றதில் எம்டிஎம்டி என்ற போதை பொருள் கடத்தி வைத்துள்ளதை பரிமுதல் செய்திருந்தனர்.

இப்படி இரு வழக்கில் சிறைக்கு சென்ற நடிகை அஸ்வதி பாபு, காதலித்து வரும் நவுபலுடன் நேற்று கொச்சி பகுதியில் காரில் சென்றுள்ளார்.குடி போதையில் இருந்த அஸ்வதி சாலையில் இருந்த கார், பைக், தடுப்பு போன்றவற்றில் உரசியபடி அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார்.

இதனை அறிந்த அங்கிருந்த மக்கள் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை பின் தொடர்ந்து மடக்கியுள்ளனர். அதை மீறியும் காரை செலுத்தி தப்பிக்க முயன்றுள்ளார். கார் டயர் கற்களில் ஏறியதால் வெடித்ததால் காரைவிட்டு இறங்கி தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.

போதையில் இருந்த அவர்களை மடக்கி பிடித்து அவரிடம் வாக்குவாதத்தில் அங்கிருந்த மக்கள் ஈடுபட்டனர். கடைக்கு செல்வதாக கூறி அங்கிருந்து எஸ்கேப்பாகிவிட்டனர். பின் அவர்களை கைது செய்து போலிசார் விசாரித்து வருகிறார்கள்.