அந்த விசயத்துக்கு முன் அதைதான் செய்வேன்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை ஆலியா..
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஆலியா பட், பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதால் உடனடியாக திருமணம் செய்தது சர்ச்சைக்குள்ளாகியது.
அதன்பின் குழந்தை பெற்றெடுத்தும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் ஆலியா பட். கல்யாணத்திற்கு பின்பும் கவர்ச்சியில் தாராளம் காட்டி நடித்து வருகிறார் ஆலியா பட். கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகை என்ற 69வது ஃபிலிம் ஃபேர் விருதினை ரன்பீர் - ஆலியா தம்பதியினர் கைப்பற்றியிருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் ஆலியா பட் அளித்த பேட்டியொன்றில் அந்தரங்க கேள்விக்கு கூச்சமின்றி பதிலளித்திருக்கிறார். தாம்பத்தியத்திற்கு முன் பாதாம் பால் போன்ற குளிர்பானங்களை குடிப்பது என் பழக்கம் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். அதனால் சிறப்பான தாம்பத்தியமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார் ஆலியா பட்.