திருமணமாகி ஐந்தே மாதத்தில் பிறக்க போகும் குழந்தை.. ஷாக் கொடுத்த ஆலியா பட் - ரன்பீர் கபூர்.. குழம்பும் ரசிகர்கள்..
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஆலியா பட். கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் மும்பையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில் ரன்பீர் அடுத்த இரு தினங்களிலேயே படப்பிடிப்பின் வேலைகளில் பிஸியாகினார்.
ஆலியாவும் தன் பணிகளை தொடர்ந்தார். இதனை அடுத்து சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் உறுதி செய்தார் நடிகை ஆலியாபட். இந்நிலையில் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தனக்கு குழந்தை பிறக்க தேதி கொடுத்திருக்கிறார்கள் என்று கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் ரன்பீர் கபூருடன் சேர்ந்து பொது இடத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தும் சென்றுள்ளனர்.
திருமணமாகி 5 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் எப்படி செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று பாலிவுட் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.
ஒரு வேலை கர்ப்பமாக இருப்பதால் தான் உடனே திருமணம் செய்து கொண்டார்களா என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.