ராஜா ராணியில் விலகுகிறேனா? கர்ப்பம் - விவாகரத்து குறித்து சீரியல் நடிகை மானசா-சஞ்சீவ்
சின்னத்திரையில் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறியவர்களாக இருப்பவர்கள் ஆல்யா மான்சா - சஞ்சீவ் தம்பதியினர். ராஜா ராணி சீரியலில் நடித்து காதலித்து வந்த இருவரும் பின் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி அய்லா என்ற பெண் குழந்தை பிறந்து வளர்ந்துள்ளார்.
சமீபகாலமாக ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார், சீரியலால் விவாகரத்து பெறப்போகிறார்கள் என பல வதந்திகள் வெளியானதற்கு தற்போது வீடியோ மூலம் பதிலளித்தனர்.
நடிகை ஆல்யா மானசா இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார் என்றும் 4 மாத கர்ப்பம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் சித்துவுடன் சீரியலில் நடிப்பதால் விவாகரத்து செய்யப்போகிறார் எல்லாம் கேட்டு ஷாக்கான இருவரும் நாங்கள் சந்தோஷமா இருக்குறது பிடிக்கலையா என்றும் கூறியுள்ளனர்.
நாங்கள் இருவரும் எதிர்ப்பார்க்கவே இல்லை. சீரியலில் விலகுவது என்பதெல்லாம் கிடையாது. ஸ்கிப்ட் அதற்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறோம் என்று இயக்குநர் கூறியுள்ளார்.