கிளாமரா ட்ரஸ் போடுவது என் விருப்பம்!! அப்படி தான் பேசுவார்கள்!! நடிகை அனிகா எடுத்த முடிவு..
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், விஸ்வாசம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.
14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, தற்போது 19 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடித்து மிரட்டி இருப்பார். தற்போது நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார் அனிகா.
நயன்தாரா லுக்கில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது, கார்த்திக் இயக்கத்தில், ஹிப் ஆப் ஆதி நடித்து இசையமைத்த PT Sir படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ள நிலையில், அனிகா பிரமோஷனுக்காக பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில், சினிமாத்துறையில் நடிகைகள் ஆடையணிந்து கொள்வது பற்றி விமர்சனங்கள் எழும். எனக்கும் அது நடந்திருக்கு. என் தனிப்பட்ட விஷயம், அது என் வேலை. எனக்கு அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சோசியல் மீடியாவில் பதிவிடுவதையே நிறுத்திவிட்டேன். இப்படி பேசுகிறார்கள் என்பதற்காக அல்ல, என்ன விருப்பம் இல்லாமல் போனது.
அதன்பின் தான் இதெல்லாம் இருக்கும். அதையெல்லாம் கவனத்தில் கொண்டு போகக்கூடாது என்றும் எது செய்தால் அவர்கள் அப்படி தான் பேசுவார்கள் என்றும் புரிந்து கொண்டேன். ஏதாவது மாற்ற வேண்டும் என்றால் அதை மாற்றுவேன் என்று அனிகா பகிர்ந்துள்ளார். எனக்கு எந்த மோசமான செயலும் நடக்கவில்லை. நான் எங்கு சென்றாலும் என் அம்மா கூடவே இருப்பார்கள், என்னை சுற்றி சிலர் இருந்து கொண்டே இருப்பாரள் என்பதால் அது நடந்தது இல்லை.