அசிங்கப்படுத்திய தயாரிப்பாளர்!! அசோக் செல்வனுக்கு வக்காலத்து வாங்கும் பிரபலம்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகை அசோக் செல்வன். சூது கவ்வும் படத்தில் நடிக்க ஆரம்பித்த அசோக் செல்வன் சமீபத்தில் ப்ளூ ஸ்டார், பொன் ஒன்று கண்டேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் எமக்கு தொழில் ரொமான்ஸ் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளாத அசோக் செல்வனை படத்தின் தயாரிப்பாளர் வெளுத்து வாங்கி பேசியிருக்கிறார்.
கல்யாணத்துக்கு அப்புறம் அப்பா, அம்மாவுக்கு கார் வாங்கி கொடுக்குற பணம் ஒரு தயாரிப்பாளரின் பணம். தாலி வித்து கொடுக்குறது தான் என்று பேசியிருக்கிறார். அவரை தொடர்ந்து தயாரிப்பாளர் கே ராஜனும் மேடையில் அசோக் செல்வனை கண்டபடி திட்டி பேசியிருக்கிறார். தற்போது இதுகுறித்து பேசிய சினிமா விமர்சகர் அந்தணன், சொன்ன சம்பளத்தை சரியாக தயாரிப்பாளர் தரப்பினர் கொடுக்கவில்லை.
சம்பளம் கொடுக்காமல் ஹீரோ எப்படி நடிக்க முடியும். நடிகருடன் சண்டைபோட்டால் எப்படி ஆடியோ லான்ச்சிற்கு வந்து பிரமோட் செய்வார். அசோக் செல்வன் மீது எந்தவொரு தவறும் இல்லை என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.
அசோக் செல்வன் ரொம்பவே சின்சியரான ஹீரோ என்றும் நடித்துக் கொடுத்த நிலையில் அவருக்குரிய சம்பளத்தை சரியாக தயாரிப்பு நிறுவனம் கொடுத்திருந்தால், அடுத்தடுத்த வேலைகளுக்கு அவரே வந்திருப்பார்.
இதுவரை அவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் எழாத நிலையில் தற்போது ஏற்படுகிறது என்றால் அவர் தரப்பு நியாயத்தையும் நாம் கவனிக்க வேண்டும் என்று அந்தணன் அசோக் செல்வனுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.