இந்தி தெரியாதவன்லாம் இந்தி படம் எடுக்குறான்.. அட்லீயை அசிங்கப்படுத்திய இயக்குனர்!!

Nayanthara Anirudh Ravichander Shah Rukh Khan Atlee Kumar
By Edward Aug 07, 2022 07:22 PM GMT
Edward

Edward

Report

இயக்குனர் அட்லீ விஜய் நடிப்பிம் தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று படங்களை இயக்கிய பின் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை இயக்க திட்டமிட்டு மும்பையில் குடியேறினார். தற்போது அப்படம் உறுதியாகி நடிகை நயன்தாராவும் ஜோடியாக நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு விறுவிறுவென சென்று கொண்டிருக்கும் போது படத்தில் டைட்டில் வீடியோ வெளியாகி இந்திய திரையுலகை மிரளவைத்தது. இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் ஒரு பேட்டியொன்றில் மறைமுகமாக வேற்று மொழி இயக்குனர்களை விமர்சித்துள்ளார்.

சமீபகாலமாக தென்னிந்திய படங்களை விட பாலிவுட் படங்கள் கடும் தோல்விகளை சந்தித்து வருகிறது. அது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பாலிவுட்டில் இந்திய தெரியாதவர்கள் எல்லாம் இந்தியில் படம் எடுக்கிறார்கள்.

இந்தி தெரியாதவன்லாம் இந்தி படம் எடுக்குறான்..  அட்லீயை அசிங்கப்படுத்திய இயக்குனர்!! | Anurag Kashyap Slams Atlee Indirectly

ஆனால் தென்னிந்தியாவில் இப்படி நடப்பது இல்லை. கலாச்சாரத்தில் அது ஒன்றி இருப்பதால் வேறு மொழி பேசுபவர்கள் இந்தி எடுப்பதனால் அது இங்குள்ள மக்களின் கலாச்சாரத்தோடு ஒற்றுப்போவதில்லை.

இது மாற வேண்டும் என்றால் தான் இந்தி படங்களுக்கு வெற்றி பெரும் என்று கூறியுள்ளார் அனுராக். தற்போது இயக்குனர் அட்லீ பாலிவுட் படத்தினை இயக்கி வருகிறதை தான் இயக்குனர் அனுராக் இப்படி விமர்சித்து பேசியுள்ளாரா என்ற கேள்வி நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது.